Saturday, March 9, 2013

அல் அய்னில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு



அல்அய்ன் மண்டல தமுமுக சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி 22.02.2013 வெள்ளிக்கிழமை மகரிப் தொழுகையைத் தொடர்ந்து சகோ. இலியாஸ் (மக்காம் கிளை பொருப்பாளர்) அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தமுமுக பொருளாளர் நாச்சிகுளம் சகோ. டாக்டர் அ. அசாலி அஹ்மது அவர்களின் தலைமையில் மாணவர் ரியாஸ் இலியாஸ் கிராத் ஓதினார். சகோ. டாக்டர் அப்துல் காதிர் (அமீரக துணைச் செயலாளர்) ”பிரார்த்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக சிதம்பரம் அஹமது ஷகீல் அவர்கள் நன்றி கூறினார்கள். சகோ. இலியாஸ் அவர்கள் தேனீர் மற்றும் இரவு உணவிற்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் அல் அய்ன் மக்காம் பகுதியில் வசிக்கும் தமிழக சகோதரிகள் தங்களது கணவர், குழந்தைகளுடன் பெருமளவில் கலந்து கொண்டனர்.

source :tmmk.in

No comments:

Post a Comment